ந த1த்3பா4ஸயதே1 ஸூர்யோ ந ஶஶாங்கோ1 ந பா1வக1: |
யத்3க3த்1வா ந நிவர்த1ந்தே1 த1த்3தா4ம ப1ரமம் மம ||6||
ந--—இல்லை; தத்--—அது; பாஸயதே-—ஒளிர செய்கிற; ஸூர்யஹ——சூரியன்; ந---இல்லை; ஶஶாங்கஹ—--சந்திரன்; ந--—இல்லை; பாவகஹ—--நெருப்பு; யத்—-எங்கே; கத்வா---போனபின்; ந--—ஒருபோதும் இல்லை; நிவர்தந்தே--—அவர்கள் திரும்புகின்றனர்; தத்--—அது; தாம-—வசிப்பிடம்; பரமம்—--உயர்ந்த; மம---என்னுடையது
BG 15.6: சூரியனோ, சந்திரனோ, நெருப்போ என்னுடைய அந்த உன்னத இருப்பிடத்தை ஒளிரச் செய்ய முடியாது. அங்கு சென்ற பிறகு, ஒருவர் மீண்டும் இந்த ஜடவுலகிற்கு திரும்புவதில்லை.
இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர் தெய்வீக மண்டலத்தின் தன்மையைப் பற்றிய சுருக்கமான நினைவுத்தோற்றத்தை தருகிறார். சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பு இந்த ஆன்மீக இருப்பிடத்தை ஒளிரச் செய்ய தேவையில்லை, ஏனெனில் இது இயற்கையாகவே தன்னொளிர்வுடையது . பொருள் சக்தியான மாயாவிலிருந்து ஜட மண்டலம் உருவாகும்போது, தெய்வீக மண்டலம் ஆன்மீக சக்தியான யோகமாயாவிலிருந்து உருவாகிறது. இது ஜட இயற்கையின் இருமைகள் மற்றும் குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் எல்லா வகையிலும் குறைபாடற்றது. இது, நித்தியம், அறிவு மற்றும் பேரின்பம் நிறைந்தது.
`அந்த தெய்வீக மண்டலம் பரவ்யோம் என்று அழைக்கப்படும் ஆன்மீக ஆகாயத்தைக் கொண்டுள்ளது. இது தெய்வீக செழுமையும் மகிமையும் நிறைந்த ஏராளமான உறைவிடங்களைக் கொண்டுள்ளது. அனைத்து நித்திய வடிவங்களான கிருஷ்ணர், ராமர், நாராயணர் மற்றும் பிறர் அந்த ஆன்மீக ஆகாயத்தில் தங்களுடைய சொந்த உறைவிடங்களைக் கொண்டுள்ளன. அங்கு அவர்கள் தங்கள் பக்தர்களுடன் நித்தியமாக வசிக்கிறார்கள் மற்றும் தெய்வீக பொழுது போக்குகளில் (லீலைகள்) ஈடுபடுகிறார்கள். ப்ரஹ்மா ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது பிரார்த்தனையில் கூறுகிறார்:
கோ3லோக1-நாம்னி நிஜ-தா4ம்னி த1லே ச1 த1ஸ்ய
தே3வீ மஹேஶ-ஹரி-தா4மஸு தே1ஷு தே1ஷு
தே1 தே1 ப்3ரபா4வ-நிச்1யா விஹிதா1ஶ் ச1 யேன
கோவிந்த1ம் ஆதி3-பு1ருஷம் த1ம் அஹம் ப4ஜாமி
(ப்3ரஹ்ம ஸம்ஹிதா1 வசனம் 43)
‘ஆன்மீக ஆகாயத்தில் கோலோகம் உளளது, இது ஸ்ரீ கிருஷ்ணரின் தனிப்பட்ட இருப்பிடம். அந்த ஆன்மீக ஆகாயத்தில் நாராயணர், சிவன், துர்கா போன்றவர்களின் உறைவிடங்களும் உள்ளன. யாருடைய மகிமையால் இது சாத்தியமாகிறதோ அந்த உன்னத தெய்வீக ஆளுமையான ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.’ ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக இருப்பிடமான கோலோக்கைப் பற்றி ப்ரஹ்மா மேலும் கூறுகிறார்:
ஆனந்த3-சி1ன்மய-ரஸ-ப்1ரதி1பா4விதா1பி4ஸ்
தாபி4ர் யா ஏவ நிஜ-ரூப1த்1யா க1லாபி4ஹி
கோ3லோக1 ஏவ நிவஸதி1 அகி1லாத்1ம-பூ4தோ1
கோ3விந்த3ம் ஆதி3-பு1ருஷம் தம்1 அஹம் ப4ஜாமி
(ப்3ரஹ்ம ஸம்ஹிதா1 வசனம் 37)
‘கோலோகத்தில் தனது சொந்த வடிவத்தின் விரிவாக்கமான ராதையுடன் வசிக்கும் ஒப்புயர்வற்ற கடவுளான கோவிந்தனை நான் வணங்குகிறேன். எப்போதும் ஆனந்தமயமான ஆன்மீக ஆற்றலால் உயிர்ப்பிக்கப்படுகிற மற்றும் அறுபத்து நான்கு கலை திறன்களின் உருவகங்களாக உள்ள பிரதான தோழியர்கள் (ஸகி) அவர்களின் நித்திய கூட்டாளிகள்.’ கடவுளை அடைந்து, அவரது உன்னத இருப்பிடத்திற்குச் செல்லும் பக்தர்கள், ஆன்மீக ஆற்றலின் பரிபூரணத்துடன் நிறைந்த அவரது தெய்வீக பொழுதுபோக்குகளில் பங்கேற்கிறார்கள். அங்கு செல்லும் அந்த ஆன்மாக்கள் பிறப்பு மற்றும் இறப்பு என்ற ஸம்ஸாரத்தைக் கடக்கும் என்று அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் உறுதியளிக்கிறார்.
ந த1த்3பா4ஸயதே1 ஸூர்யோ ந ஶஶாங்கோ1 ந பா1வக1: |
யத்3க3த்1வா ந நிவர்த1ந்தே1 த1த்3தா4ம ப1ரமம் மம ||6||
சூரியனோ, சந்திரனோ, நெருப்போ என்னுடைய அந்த உன்னத இருப்பிடத்தை ஒளிரச் செய்ய முடியாது. அங்கு சென்ற பிறகு, ஒருவர் மீண்டும் இந்த ஜடவுலகிற்கு திரும்புவதில்லை.
Sign in to save your favorite verses.
Sign Inపవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily